கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 உள்ளூர் விடுமுறை

Share others

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹா சிவராத்திரியினை முன்னிட்டு
26.2.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து
மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்
உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
(2) 26.02.2025 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு
ஈடாக 2025 மார்ச் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (8.3.2025) அன்று
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹா சிவராத்திரி உள்ளூர் விடுமுறை
செலவாணி முறிச் சட்டம் 1881 இன் படி
அறிவிக்கப்படவில்லை என்பதால் 26.2.2025 அன்று கன்னியாகுமரி
மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு
சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான
பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா உத்தரவிட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவை முன்னிட்டு 4.3.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
(2) 4.3.2025 அன்று அறிவிக்கப்பட்டு உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக (22.03.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 4.3.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில்
மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 11.3.2025
(செவ்வாய்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில
அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர்
விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
(2) 11.3.2025 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு
ஈடாக 2025 ஏப்ரல் திங்கள் நான்காவது சனிக்கிழமை (12.4.2025) அன்று
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு
பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்
மாசிக் கொடைவிழா உள்ளூர் விடுமுறை
செலவாணி முறிச் சட்டம் 1881 இன் படி
அறிவிக்கப்படவில்லை என்பதால் 11.3.2025 அன்று கன்னியாகுமரி
மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு
சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான
பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
அவர்களால் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *