கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்மீக பயணம் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு

Share others

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆன்மீக பயணம் மேற்க்கொள்ள கீழ் குறிப்பிடும் ஆலயங்கள் சென்று தரிசனம் செய்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்கி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நட்டாலம் சிவன் கோயில் மற்றும் கிருஷ்ணன் கோயில், திற்பரப்பு மாஹாதேவர் கோயில் தரிசனம் செய்து திற்பரப்பு அருவியை சுற்றிப் பார்த்துவிட்டு மாலை 4.00 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கும், 4.30 மணிக்கு கன்னியாகுமரி பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் பயண ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு
துணை மேலாளர் வணிகம் 9894135377
கன்னியாகுமரி கிளைமேலாளர் 9487599087
9487599088


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *