கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழா மே மாதம் 14 ஆம் தேதி துவங்கி 17 ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலையில் தீபாராதனை, துர்க்கா பூஜை, மதியம் சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டுப் போட்டிகள், இரவில் பரிசு வழங்குதல் நடந்தது. இரண்டாம் நாள் விழாவில் காலையில் கணபதி ஹோமம், தீபாராதனை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குலைவாழை கட்டுதல், மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம், தொடர்ந்து நையாண்டி மேளம், 9 மணிக்கு மகுட கச்சேரி, ஒரு மணிக்கு சிறப்பு அலங்கார தீவாரதனை நடந்தது. 3 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு மகுட கச்சேரி, மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அலங்கார தீவாரதனை, 2.30 மணிக்கு அன்னதானம், மாலையில் பஜனை, இரவில் நவீன வில்லிசை, ஒரு மணிக்கு அர்த்த சாம பூஜை நடக்கிறது. 4 ம் நாள் விழாவான மே 17 ம் தேதி காலை 5 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நையாண்டி மேளம், 9 மணிக்கு வில்லிசை, மதியம் ஒரு மணிக்கு சிறப்பு தீபாராதனை, 3.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள், ஊர் தலைவர் ஜெகன், துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன், பொருளாளர் ரெதீஷ் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.
குளுமைக்காடு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழாவில் 1008 திருவிளக்கு பூஜை
