கண்டன்விளை வில்லுக்குறி சாலையில் அமைந்து உள்ள கண்டன்விளை ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே கிராசிங் பாலம் கட்ட வலியுறுத்தி ஜூன் மாதம் 28 ம் தேதி காலை 9 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடப்பதாக போராட்ட குழு தலைவர் அருள் ராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணமங்கலம் சமூக நலக்கூடத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போராட்ட குழு தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அஜிகுமார் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ஆல்ஜின் பீனிஷ் பேசினார். செயலாளர் ராஜன் நன்றி கூறினார். கூட்டத்தில் பல ஊர்களில் இருந்து ஊர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜூன் 28 ல் மறியல் போராட்டம்
