நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சி ஆலோசனை கூட்டம்

Share others

வருகின்ற 25.5.2025 சிவந்தி ஆதித்தனார் கல்லூரி
நிர்வாகிகள் இணைந்து நடத்தும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி
தொடர்பாக ஆலோசனை கூட்டமானது, குமரி மாவட்ட
கட்டுனர் நலன் அறக்கட்டளை மற்றும் சிவந்தி ஆதித்தனார்
கல்லூரி நிர்வாகிகள் சார்பாக நாகர்கோவிலில் உள்ள ஹோட்டல்
விஜயதாவில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு
சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் செல்வகுமார்
மற்றும் அறக்கட்டளையின் தலைவர் ராஜகுமார் ஆகியோர்
இணைந்து தலைமையுரை ஆற்றினார்கள். அறக்கட்டளையின்
நிறுவன தலைவர் பாரத் வில்சன், அறக்கட்டளையின்
முன்னாள் தலைவர் கிங்ஸ்டன் ஜெயசிங், அறக்கட்டளையின்
பொருளாளர் ஜெபகுமார் மற்றும்
மற்றும்
சிவந்தி ஆதித்தனார் கல்லூரி
நிர்வாகிகள்
ஆகியோர்
வாழ்த்துரை

வழங்கினார்கள். கட்டுனர் அறக்கட்டளையின் சார்பாக டதி
நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி
வழங்கப்பட்டது. டிவி-யை குமரி மாவட்ட கட்டுமான
அறக்கட்டளையின் உறுப்பினர் இளங்கோ அன்பளிப்பாக வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஏரளமான
அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள்
கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *