பெரும் எதிர்பார்ப்போடு உருவாகும் 2 இன் 1 படப்பிடிப்பு

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் சினிமா சூட்டிங் என்பதை அறிந்த உடன் குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர் ஆனது. அதன் பிறகு தயாரிப்பாளர் யார் என்பதை தெரிந்து கொண்டு மெதுவாக பேச்சை கொடுத்தோம். அப்போது படு பிசியாக சூட்டிங் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு சிறிது நேரம் சூட்டிங்கை வேடிக்கை பார்த்து போல் என்ன கதையாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினோம். சூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியே வருவது வரை கதையை பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளருக்கு சற்று நேரம் ஓய்வு கிடைத்த இடைவெளி பார்த்து பேச்சு கொடுத்த போது 3 இன் 1 மீடியா சார்பில் நாஞ்சில் ஏ ஜாண் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் 2 இன் 1 படபிடிப்பு நடந்து வருவதை தெரிவித்தார். இவ்வளவு பேச்சு தந்தால் விட்டா பார்போம் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள பேச்சை தொடர்ந்தோம். படத்தின் இயக்குனர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் ஷார்முக், எடிட்டிங் நிஷார், இசை இளையராஜா, சண்டை பயிற்சி தளபதி தினேஷ், நடனம் கவுசல்யா என்று பேச்சை தொடர்ந்தார். கதாநாயகன் அசோக் குமார், கதாநாயகி அலிசா மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பதாக தெரிவித்தார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கொட்டாரம், மந்தாரம் புதூர், மஞ்சாலுமூடு, மார்த்தாண்டம் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடப்பதாகவும் தெரிவித்தார். படக்குழுவினர் மிகவும் உற்சாகமாக படப்பிடிப்பை எடுத்து வருவதை பார்த்தால் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க கூடிய கதை அம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பது மட்டும் தெரிய வருகிறது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *