
கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை கன்னியாகுமரி மாவட்டம் இளையோர் அணி மற்றும் மகளிர் அணி நடத்திய போதை விழிப்புணர்வு பேரணி கல்லுவிளை சந்திப்பில் இருந்து துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளர் யுசிசி தொடர்பாளர் ராஜ், மேசியா மிஷன் பேராயர் மரியராஜ் இறை வேண்டல் செய்தார். தக்கலை டிஎஸ்பி உதய சூரியன் பேரணியை துவக்கி வைத்தார். பொதுக்கூட்டத்துக்கு சிஎஸ்ஐ கன்னியாகுமரி பேராயர் செல்லையா தலைமை வகித்தார். மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். லுத்தரன் திருச்சபை தலைவர் டேவிட்சன் இறை வேண்டல் செய்தார். யுசிசி மகளிர் அணி தலைவர் ரெஜினி விஜிலா ராஜ் விவிலியம் வாசித்தார். எல்எம்எஸ் சபை தலைவர் வில்சன் வரவேற்றார். மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைவர் உரையாற்றினார். யுசிசி பொருளாளர் வின்சென்ட் ராபர்ட் வாழ்த்துரை வழங்கினார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் அறிமுக உரையாற்றினார். கேட்டார் மறைமாவட்ட போதை விழிப்புணர்வு ஆற்றுப்படுத்துதல் அருட்பணி நெல்சன் சிறப்புரை ஆற்றினார். யுசிசி இணை செயலாளர் பிரபின் செல்வமணி நன்றி கூறினார். மார்த்தாண்டம் டிவிஷனல் தளபதி மேஜர் செல்வம் நிறைவு இறைவேண்டல் செய்தார்.