மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

Share others

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் தொடக்க நாளான 16 ஆம் தேதி காலையில் மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி நினைவில் வாழும் அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்கள் நினைவாக திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்டம் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் முன்னிலையில் திருக்கொடியேற்றம், மறையுரை, கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஜாண்ரூபஸ் தலைமையில் திருப்பலி ஆகியவை நடந்தது. ராஜாக்கமங்கலம் துறை இணை பங்குத்தந்தை அருட்பணி அஜித் ஜேம்ஸ், தக்கலை அதிபர் அருட்பணி வென்சஸ்லாஸ் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர். 1 முதல் 50 வரை உள்ள அன்பியங்கள், அன்பிய ஒருங்கிணையம், அடித்தள முழு வளர்ச்சி சங்கம், வில்லுக்குறி வட்டார மனித நேயக் கூட்டமைப்பு ஆகியவை சிறப்பித்தன. இரவில் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை செபமாலை , புகழ்மாலை, திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2 ம் நாள் விழாவில் மாலையில் திருப்பலி அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ் தலைமையில் அப்பட்டுவிளை புனித அந்தோணியார்ஆலய பங்குத்தந்தை அருட்பணி ரொமெரிக் ததேயுஸ் மறையுரையோடு நடக்கிறது. சுவாமியார்மடம் இணை பங்குத்தந்தை அருட்பணி ஸ்தனிஸ்லாஸ் விருந்தினராக கலந்து கொள்கிறார். அனைத்து பக்த சபைகள், இயக்கங்கள் சங்கங்களின் ஒருங்கிணையம், பீடச் சிறுவர்கள் சிறப்பிக்கின்றனர்.3 ஆம் நாள் விழாவான 18ம் தேதி காலை 6 மணிக்கு புலியூர்குறிச்சி அதிபர் அருட்பணி இயேசு ரெத்தினம் தலைமையில், பொன்மலை தியான மையம் இயக்குனர் அருட்பணி மரிய வின்சென்ட் மறையுரையில் திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. மறைக்கல்வி கழகம் சிறப்பிக்கின்றனர். மாலை 4.30 மணிக்கு திரித்துவபுரம் மறை வட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி ஒய்சிலின் சேவியர் தலைமையில் நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. இறைவார்த்தை பகிர்வு மாத்திரவிளைபங்குத்தந்தை அருட்பணி கலிஸ்டஸ், மேல்புறம் பங்குத்தந்தை வின்சோ ஆகியோர் செய்கின்றனர். 4 ம் நாள் மாலை திருப்பலி கப்பியறை பங்குத்தந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில் சகாய நகர் பங்குத்தந்தை அருட்பணி மரிய ஆன்றோ ஹால்வின் மறையுரையோடு நடக்கிறது. இதில் மண்ணின் மைந்தர்கள் சுங்கான்கடை தாதியர் கல்லூரி தாளாளர் அருட்பணி டோமினிக் சாவியோ, துண்டத்துவிளை பங்குத்தந்தை அருட்பணி எக்கர்மன்ஸ் மைக்கேல் கலந்து கொள்கின்றனர். மரியாயின் சேனை சிறப்பிக்கின்றனர். 5 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு நடக்கும் திருப்பலி காரங்காடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருள்பணி சகாய ஜஸ்டஸ் தலைமையில், குழித்துறை மறை மாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் பேரருட்பணி மார்ட்டின் மறையுரையோடு நடக்கிறது. திருக்குடும்பத் திரு இயக்கம் சிறப்பிக்கின்றது. மாலையில் நடக்கும் திருப்பலி நட்டாலம் அதிபர் அருட்பணி பால் ரிச்சர்டு ஜோசப் தலைமையில் கல்குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி ஜார்ஜ் பொன்னையா மறையுரையோடு நடக்கிறது. விருந்தினராக கொன்னக்குழிவிளை பங்குத்தந்தை அருட்பணி ஜியோ கலந்து கொள்கிறார்.சிறப்பிப்போர் சிறார் பணிக்குழு. 6 ம் நாள் விழாவில் காலை 10.30 மணிக்கு நோயாளர்கள் மற்றும் மூத்தோருக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது . மாலையில் நடக்கும் திருப்பலி மண்ணின் மைந்தர் அருட்பணி தீஸ்மாஸ் தலைமையில் முள்ளங்கிணாவிளை பங்குத்தந்தை அருட்பணி ஆன்ட்ரூஸ் மறையுரையோடு நடக்கிறது . விருந்தினர் முரசங்கோடு இணை பங்குத்தந்தை அருட்பணி அஸ்வின் பால். சிறப்பிப்போர் இளைஞர் இயக்கம், இளம் பெண்கள் இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம். 7 ஆம் நாள் விழாவான 22ம் தேதி மாலையில் நடக்கும் திருப்பலி குழித்துறை மறைமாவட்டம் நிதிபரிபாலகர் பேரருள்பணி ஜெயக்குமார் தலைமையில், இயேசுவை காண்போம் நற்செய்தி மையம் இயக்குனர் அருட்பணி ரபேல் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் தக்கலை இணை பங்குத்தந்தை அருட்பணி அபிரகாம். சிறப்பிப்போர் கல்வி நிறுவனங்கள்.இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 8 ஆம் நாள் விழாவான 23ம் தேதி காலை திருப்பலி குழித்துறை மறை மாவட்ட திருமண நீதிமன்ற ஆயர் பதிலால் பேரருட்பணி ஆரோக்கிய ஜோஸ் தலைமையில் மார்னிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் அருட்பணி சேகர் மைக்கேல் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் மஞ்சாடி பங்குத்தந்தை அருட்பணி ஜோஸ் பிரசாந்த். காலை 10 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனித நேய கூட்டமைப்பு பொதுக்கூட்டம், காலை 11 மணிக்கு பகிர்வின் சமபந்தி விருந்து, சிறப்பிப்போர் கத்தோலிக்க சங்கம். மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி குழித்துறை மறைமாவட்டம் மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. விருந்தினர்கள் முரசங்கோடு பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ், சுவாமியார்மடம் அருட்பணி ராயப்பன். சிறப்பிப்போர் வில்லுக்குறி இறைமக்கள். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

9 ஆம் நாள் விழாவான 24ம் தேதி காலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட செயலாளர் பேரருட்பணி அந்தோணி முத்து தலைமையில் புனித சவேரியார் பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் அருட்பணி சார்லஸ் விஜு மறையுரையோடு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது, சிறப்பிப்போர் முதல் திருவிருந்து பெறும் சிறார்கள். மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை கண்டன்விளை பங்குத்தந்தை அருட்பணி பெஞ்சமின் போஸ்கோ தலைமையில் கன்னியாகுமரி பங்குத்தந்தை அருட்பணி உபால்டு மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர்கள் தக்கலை இணை பங்குத்தந்தை அருள்பணி அந்தோணி முத்து, வெள்ளிக்கோடு பங்குத்தந்தை அருட்பணி மைக்கேல் அலோசியஸ். சிறப்பிப்போர் பணித்திட்டக் குழுக்கள், புனித செபஸ்தியார் பங்கு வளர்ச்சி நிறுவனம், செயின்ட் செபஸ்தியான் நிதி லிமிடெட், புனித செபஸ்தியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்புதவில், வானவேடிக்கையும் நடக்கிறது, 10 ம் நாள் திருவிழாவான 25ம் தேதி காலை 6.30 மணிக்கு முளகுமூடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி டேவிட் மைக்கேல் தலைமையில், வெட்டுவெந்நி திருத்தலம் அதிபர் அருட்பணி சகாயதாஸ் மறையுரையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது, விருந்தினர் கார்மல் சபை இறை அழைத்தல் இயக்குனர் அருட்பணி பெஞ்சமின். சிறப்பிப்போர் பங்கு மேய்ப்புப்பணி பேரவை, பாடகற் குழு, காலை 8.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில், ஆரல்வாய்மொழி மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி ராஜமணி மறையுரையில் ஆடம்பர பெருவிழா திருப்பலி நடக்கிறது, விருந்தினர்கள் வட்டம் பங்குத்தந்தை அருட்பணி ஜாக்சன், புனர்ஜீவன் ஆற்றுப்படுத்துதல் மையம் இயக்குனர் அருட்பணி ஸ்தனிஸ்லாஸ். சிறப்பிப்போர் பங்கு இறைமக்கள், திருவழிப்பாட்டு குழு. மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில், இரவு 8 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்குதல், வழி நடத்துபவர்கள் திருக்குடும்ப திருஇயக்கம். திருவிழா நன்கொடையாளர்கள் மற்றும் சிறப்பு குழுக்களின் பொறுப்பாளர்களை கவுரவித்தல் நிகழ்வும், 8.30 மணிக்கு மாடத்தட்டுவிளை வெளியூர் வெளிநாடு வாழ் மக்கள் வழங்கும் கலைநிகழ்ச்சி ஆகியவையும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தை அருட்பணி ஜேம்ஸ், அருள் சகோதரிகள் மற்றும் பங்கு மேய்ப்புப்பணிபேரவை துணைத் தலைவர் சகாய பால்ததேயு, செயலாளர் மேரி ஸ்டெல்லாபாய், துணைச் செயலாளர் ஜோஸ்வாால்டின், பொருளாளர் சார்லஸ், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *