இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக வருகின்ற 6.2.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு, விண்ணப்பிக்க 2.1.2004 முதல் 2.7.2007 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதள மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற 6.2.2024 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தல் வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04575-245225 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
விமானபடையில் ஆள் சேர்ப்பு
