கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மேலப்பள்ளம் தூவலாற்றில் பாலம் கட்ட குளச்சல் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பாலம் அமைக்கும் பணியை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பார்வையிட்டார். காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் உதயம், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி அருகே பாலம் கட்டும் பணி
