12 ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து

Share others

12 ம் வகுப்பு பொதுதேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22461 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை சிறந்த முறையில் எதிர் கொள்வதற்காக, இந்த வருடம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
குறுந்தேர்வு, மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறு தேர்வுகள், மாலை நேர சிறப்பு வகுப்புகள், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கான தனி சிறப்பு பயிற்சிகள், பாட நிபுணத்துவம் வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள், தேர்வை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மனரீதியான வழிகாட்டுதல்கள், பருவ தேர்வுகளை தாண்டி,முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருப்புதல் தேர்வுகள் முதலானவை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதன் பேரில் பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் பக்குவ நிலைக்கு மாணவர்கள் வந்துள்ளனர். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியுற செய்ய வேண்டும் என்ற நோக்கில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்ட மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. ஒழுங்காக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை சிறப்பு முயற்சிகள் மூலம் பள்ளிக்கு வருகை புரிய செய்து, அம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து கட்ட முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா எடுத்து உள்ளார். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, மாணவர்களை சிறப்பாக தயாரித்து உள்ளார். தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில், பிற துறை அலுவலர்களுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை செய்து உள்ளது.தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் எந்த அச்சமும் இன்றி தைரியத்துடன், தேர்வை எழுதி, நல்ல வெற்றி வாய்ப்புகளை சூடவேண்டும் என மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *