335 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. குமரி போலீசார் அதிரடி

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.  அந்த  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார்  55,27,000 (ஐம்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி ஏழாயிரம் ரூபாய்) மதிப்பு உள்ள 335 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்  உரிய நபர்களிடம்  ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.

மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இது வரையிலும் சுமார் 1,04,07,000  (ஒரு கோடியே நான்கு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்) மதிப்பு உள்ள 640 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள  காவல்  நிலையத்தில்  உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது TamilNadu  Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) என்ற காவல் துறை             இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். CEIR Portal  (https://www.ceir.gov.in/) என்ற இணையதளத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து புகார் அளிக்கலாம்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *