கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Share others

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் 14.2.2025 அன்று வெள்ளிக்கிழமை  காலை 10  மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதி உள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.  இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 14.2.2025 அன்று காலை 10 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும்,   முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ள  வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்  (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  எனவே,  இந்த சேவையை பொதுமக்களும்,   நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்துக் கொள்கிறார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *