கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

Share others

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் முதல் பாறசாலை வரையிலான ரயில்வே இருவழி இருப்புப்பாதை அமைக்கும் பணி தென்னக ரயில்வே மூலம் நடைபெற்று வருகிறது. கல்குளம் வட்டம், நுள்ளிவிளை அ கிராமத்தில் (எல்.சிஎண் 20 கண்டன்விளை) ரயில்வே மேம்பாலம் அமைக்க CAO/CN/ERS மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அலுவலர், கட்டுமானம், எர்ணாகுளம் அலுவலகக்கடிதம்எண் W.182/1/CN/ERS/TVC-CAPE, நாள்:29.5.2025-ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நுள்ளிவிளை அ கிராமத்தில் (எல்.சிஎண் 20 கண்டன்விளை) ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *