கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். இந்த பெரியவரை அவரது குடும்பத்தினரிடம் சேர்பதற்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லட்சுமியின் கணவர் அடிப்படையில் இரணியல் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் வேல் குமார் பெரியவரை பற்றி விசாரித்து அவரின் குடும்பத்தினரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி பெரியவர் அவரது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டார். பெரியவரை குடும்பத்தினரிடம் பத்திரமாக சேர்க்க உதவிய இரணியல் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் வேல் குமார் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குமார் ஆகியோருக்கு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
தவறிய பெரியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இரணியல் போலீஸ்
