திங்கள்நகரில் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்

Share others

கன்னியாகுமரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் நாடார் சமுதாய கல்வி வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம் திங்கள் நகர் மணவாளக்குறிச்சி ரோட்டில் உள்ள நாஞ்சில் மஹாலில் ஜனவரி மாதம் 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட நாடார் மகாஜன சங்க செயலாளர் முருகன் தலைமையில் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், திங்கள் நகர் செயலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐசக் சாம்ராஜ் வரவேற்கிறார். நாடார் மகாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், எம் ஆர் காந்தி, முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். மாவட்ட துணை செயலாளர் ஜார்ஜ் ஜஸ்டின் நன்றி கூறுகிறார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *