காரங்காடு கிளை நூலகம் மற்றும் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தக்கலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் தாமஸ் லைசா தலைமை வகித்தார். தலைமை காவலர் செல்வின் ஜோசப், ஆசிரியை பியூலா பேபி, நூலகர் கிறிஸ்து ராஜன், பங்கு பேரவை உறுப்பினர் அலோசியஸ் ஏங்கல்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காரங்காட்டில் மது விலக்கு மற்றும் போதை விழிப்புணர்வு முகாம்
