
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவிதாங்கோடு கிளை சார்பாக பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு மற்றும் ஸஃபியா பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி கிளை தலைவர் முஸம்மில் தலைமையில் அழகிய மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் நபில் அஹ்மத், செயலாளர் ஹுசைன் ஜவாஹிரி, பொருளாளர் செய்யது அகமது கரீம், துணைத் தலைவர் யாசிர், துணைச் செயலாளர் நூருல் அமீன், முகம்மது கியாசுதீன், முகம்மது ராபி மற்றும் கிளை செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் அப்துல் ஹமீது, துணைத் தலைவர் இக்பால் துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் பேச்சாளர்கள் மசூத் உஸ்மானி, சுஜா அலி, யாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஒருவருட ஆலிமா பயிற்சி வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துந் நாசர் சான்றிதழ் வழங்கினார்.