பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

Share others

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்ந நாள் நிறைவுநாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, கலந்துகொண்டு, அரசு அலுவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 22.4.2025 அன்று சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 29.4.2025 அன்று முதல் மே 5ம் தேதி வரை தமிழ்வார விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு வார கொண்டாட்ட நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த நிகழ்ச்சியின் நோக்கம் பாவேந்தர் பாரதிதாசன் சமூகநீதிகொள்கை, அவர் எழுதிய புரட்சிகர படைப்புகள், தமிழ் உணர்வு உள்ளிட்டவைகளை இன்றைய இளைய தலைமுறையினர், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
அதனடிப்படையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கையெழுத்துப்போட்டி, படத்தை அடிப்படையாக கொண்டு கதை சொல்லும் போட்டி, குறிப்பு எழுதுதல் மற்றும் வரைவு எழுதுதல் போட்டி, அறிவியல் தமிழ் மற்றும் கணினித் தமிழ் குறித்த வினாடி வினா போட்டி, தமிழ் இலக்கியம், தமிழ் புதினம் தொடர்பாக கதை சொல்லும் போட்டி, கவிதை வாசிப்பு போட்டி, தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, உதவி இயக்குநர் தமிழ்வளர்ச்சித்துறை (பொ) ரெசினாள்மேரி, உசூர் மேலாளர் சுப்பிரமணியம், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, இணை இயக்குநர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், வட்டாட்சியர்கள் கோலப்பன் (தோவாளை), தனித்துணை வட்டாட்சியர் மணிகண்டன், அரசு அலுவலர்கள், தமிழ் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டர்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *