பைப் என் டைல்ஸ் கிளை திறப்பு

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் 4 வது கிளை செரா கேலாரி ஆழ்வார்கோவிலில் பிரம்மாண்டமாக திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் திறந்து வைத்தார். செரா கேலாரியை செரா நிறுவனத்தின் துணைத்தலைவர்கள் ஹரி சுப்பிரமணியன், மற்றும் ராஜேந்திர பிஸ்ட் ஆகியோர் திறந்து வைத்தனர். கவுரவ விருந்தினர்களாக திருவனந்தபுரம் ஹோம் டெக் கட்டிட வல்லுநர் ராஜினீஸ் கிளைமெண்ட், நாகர்கோவில் ஐடியல் கன்ரெக்சன் உரிமையாளர் பொறியாளர் சிறில் கிறிஸ்து ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் விழாவில் கட்டுமான வல்லுனர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *