மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நவம்பர் 17 ம் தேதி பஜனை துவங்கியது. இந்த பஜனையானது தொடர்ந்து 37 நாட்கள் நடக்கிறது. இந்த பஜனையின் கடைசி 6 நாட்கள் பஜனை பட்டாபிஷேக விழாவாக கொண்டாடப்படுகிறது.. அதன்படி பஜனை துவக்க நாளில் நடந்த சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. முதல் நாள் பொது பஜனையாக துவங்கியது. பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லா, இணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் மற்றும் பேரவை உறுப்பினர்கள், பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.அடுத்து வரும் நாட்களில் தென் மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், குதிரைபந்திவிளை மண்டலம், பண்டாரக்காடு மண்டலம் என 5 மண்டலங்கள் வாரியாக பஜனை நடக்கிறது.