
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வருகின்ற 25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10
மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெற
உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்
பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப்
பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு
விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி
செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.