63 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share others

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள்
குறைதீர்க்கும் நாள்
கூட்டம்.
மாவட்ட

ஆட்சியாளர்
ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில். இலவச வீட்டுமனைப் பட்டா. சமூக
பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை மாவட்ட ஊனமுற்றோர் மற்றும்
மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்.
புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
பொதுமக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய
மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட
துறை
அலுவலர்களுக்கு
ஆட்சியாளர்
ஆஷா அஜித் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2
பயனாளிகளுக்கு தலா ரூ. 25,000 மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர்
கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ. 50,000 மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவியும்
மற்றும் 3 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 44 உறுப்பினர்களுக்கு மொத்தம்
ரூபாய்
25,42,000 மதிப்பீட்டிலான கடனுதவிகளும், மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.22,860
மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களும், அறிவு சார்
குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும்
பயிற்சிக்கான நூல்களும், 1 மாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர்
நியமனச் சான்றினையும் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.26,64,800 லட்சம்
மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் அதன் பயன்களையும் மாவட்ட
ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்.


நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர்
(பொ)
சாந்தி உட்பட

அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *