
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க
மைதானத்தில் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தேசியக்கொடியினை
ஏற்றி வைத்து. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர்,
சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களை
பறக்கவிட்டார்.

அதனைத் தொடர்ந்து,
காவல்துறையை சார்ந்த 77 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்
காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சியாளர் வழங்கினார். மேலும்,
அரசுப்பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை (99), வருவாய்த்துறை (23), கூட்டுறவு துறை (1),
நகராட்சி நிர்வாகம் (4), பேரூராட்சிகள் துறைகள் (1), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (30),
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் (1), வங்கித்துறை (1), வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை
(2),சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (3), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (2),
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை (20), வேளாண்மை பொறியியல் துறை (1), வேளாண்மை
மற்றும் உழவர் நலத்துறை (3), கருவூலம் மற்றும் கணக்குத்துறை (3)மருத்துவம் மற்றும் ஊரக
நலப்பணிகள் (2), பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை (16), இந்திய மருத்துவம்
மற்றும் ஓமியோபதித்துறை (3), மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (4), தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை (3), கால்நடை பராமரிப்புத்துறை (1), முதலமைச்சரின் விரிவான மருத்துவ
காப்பீடு திட்டம் (1), மருத்துவக் குடும்பநலத்துறை (1), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
(3), தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (4), பள்ளிக் கல்வித்துறை (7),
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 2022-2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு
பொதுத்தேர்வில் 95 சதவீதத்துக்கு மேல் மற்றும் 100 தேர்ச்சி காட்டிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
(15), நில அளவைப் பதிவேடுகள் துறை (4), விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை (1),
நீர்வளத்துறை (2), சுற்றுலா நலத்துறை (1). மாவட்ட தொழில் மையம் (1), கனிமம் மற்றும்

சுரங்கத்துறை (1), காவல்துறை (3), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை (1), ஒருங்கிணைந்த
குழந்தை வளர்ச்சி திட்டம் (4). வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் (1),
போக்குவரத்துத்துறை (3), பொதுபணித்துறை (4), நெடுஞ்சாலைத்துறை (3), தமிழ்வளர்ச்சித்துறை
(1), தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை (திருநெல்வேலி, நாகர்கோவில்) (2), தமிழ்நாடு குடிநீர்
வடிகால் துறை (2), ஆகிய துறைகளை சார்ந்த 189 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு
சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்.
மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி
திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.01,962 லட்சம் மானியமும், தோட்டக்கலை
மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும்,
வேளாண்மை பொறியியல் துறை 1 பயனாளிக்கு ரூ.1.80 லட்சம் மானியத்தில் எண்ணெய்
பிழிந்தெடுக்கும் இயந்திரம், 1 பயனாளிக்கு ரூ.2.87 லட்சம் மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி,
3 பயனாளிக்கு தலா ரூ.15,000 மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட், 1 பயனாளிக்கு ரூ.14,501
மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்களும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு
திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ்
சிறப்பாக செயல்பட்ட 3 பணியாளர்களுக்கும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி,
மருத்துமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா இன்ஸ்டியூட் ஆப்
மெடிக்கல் சயின்ஸ் ஆகியோருக்கும், அரசின் திட்டங்கள் குறித்து கிராமிய பாடல்கள் மூலம்
விழிப்புணர்வு ஏற்படுத்திய கிராமிய பாடகர்கள் 2 நபர்களுக்கும், விளையாட்டுத்துறையின் சர்வதேச
மற்றும் தேசிய அளவிலான தடகளம், டேக்வேண்டோ, யோகா மற்றும் செஸ் போட்டிகளில்
பங்கேற்று பரிசு பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் 4 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 2 பயனாளிக்கு 2023-24-க்கான சிறந்த
விவசாயிக்கான விருதும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின்
சார்பில் 2022-23-க்கான மாவட்ட அளவிலான சிறந்த விடுதி மற்றும் சிறந்த காப்பாளினிகளுக்கு
காசோலை மற்றும் நற்சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1
மாணவனுக்கு தனித்திறமை வாய்ந்த மாற்றுத்திறனாளி என்ற பாராட்டு சான்றிதழ்களும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 20 ஆண்டுகள் விபத்துயின்றி வாகனம்
ஒட்டிய 1 வாகன ஒட்டுநர்க்கு 4 கிராம் தங்க பதக்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் கண்டுகளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்
விஜய்வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில்
மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர்
மேரி பிரின்சி லதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், நாகர்கோவில்
வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள்
சங்கரநாராணன் (பொது), கீதா (வேளாண்மை), வேளாண்மை இணை இயக்குநர்
ஆல்பர்ட் ராபின்சன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) ஷீலா ஜாண், திட்ட
இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), பீபீஜாண் (மகளிர் திட்டம்), தனித்துணை
ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குழந்தை சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர்
விமலா ராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கனகராஜ். மாவட்ட சமூகநல அலுவலர்
சரோஜினி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி,
செயற்பொறியாளர்கள் ஜோதி பாஸ் (நீர்வளத்துறை), வெள்ளச்சாமி (கட்டடம்),
பாஸ்கர் (நெடுஞ்சாலைதுறை), ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்
பிரின்ஸ் பயஸ், உசூர் மேலாளர்
(நிதியியல்) ஜீலியன், தனி வட்டாட்சியர் கோலப்பன் (பழங்குடியினர்), நாகர்கோவில் வருவாய்
கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு
அலுவலர்கள், வட்டாசியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.