மாடத்தட்டுவிளையில் விடுமுறை விவிலிய வகுப்பு

Share others

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழகம் சார்பில் நடந்த விடுமுறை விவிலிய வகுப்புகள் மகிழ்வோம் புகழ்வோம் அடிப்படையில் நடந்தது. துவக்க விழா முதல் நிறைவு விழா வரை மாணவ, மாணவிகள் விடுமுறை விவிலிய வகுப்புகளில் கலந்து கொண்டனர். விடுமுறை விவிலிய வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கி புனித செபஸ்தியார் ஆலயம் வரை நடந்தது. பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ் வாழ்த்துரை வழங்கினார். பங்கு பேரவை செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் மற்றும் அருட்சகோதரி ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழக தலைவர் ஜாண்போஸ்கோ தலைமையில், துணைத் தலைவர் மேரி ஜெயசீலி, செயலாளர் ஆன்சன், துணை செயலாளர் ஜாய்ஸ், பொருளாளர் சார்லஸ் மற்றும் விடுமுறை விவிலிய வகுப்பு பொறுப்பாளர், ஆசிரியர்கள் இணைந்து செய்து இருந்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *