
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது
மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி
நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர்
வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி
331 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட
அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த
அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
