கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலையில் மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, மகா கணபதி ஹோமம், ஆனந்த விநாயகருக்கு இளநீர் அபிஷேகம், தீபாராதனை, சிற்றுண்டி, 9 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, 11 மணிக்கு ஸ்ரீ கைலாசநாதருக்கு இளநீர் அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு சிறப்பு பஜனை, 6 மணிக்கு 55 வது 1008 திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு ஆன்மீகப் பேருரை, 9.30 மணிக்கு திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசு வழங்குதல் நடக்கிறது. 2 ம் நாள் விழாவில் காலையில் திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, அபிஷேகம், தீபாராதனை, லட்சார்ச்சனை, மதியம் தீபாராதனை, 3 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், 5 மணிக்கு 33 வது ஆண்டு சிவலிங்க பூஜை, இரவு 7:30 மணிக்கு ஆன்மீக சிந்தனை இன்னிசை பட்டிமன்றம், 10 மணிக்கு பரிசு வழங்குதல் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு அம்மனுக்கு இளநீர் அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8:30 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, மதியம் தீபாராதனை, ஒரு மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு 17 வது பௌர்ணமி பூஜை, இரவு 8 மணிக்கு புராண நாட்டிய நாடகம், 10:30 மணிக்கு தீபாரதனை நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலை 8:30 மணிக்கு சுமங்கலி பூஜை, மதியம் 12:30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பஜனை, 6 மணிக்கு பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்குதல், இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசை, 10:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 5 ம் நாள் விழாவான ஜனவரி 3 ம் தேதி காலை 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8:30 மணிக்கு 25 வது ராகுகால துர்கா பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம், பால், பன்னீர், தேன், களபம் குடங்களில் பேயன்குழி பிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சன்னதி வரை யானை பவனி வருதல், 6 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 9 மணிக்கு விழா தொகுப்பு நன்றியுரை, 10 மணிக்கு பொய்க்கால் குதிரை விளையாட்டு, 10:30 மணிக்கு மகா தீபாராதனை இதனைத் தொடர்ந்து பஜனை, நாதஸ்வர கச்சேரி, பொய்க்கால் குதிரை, சிங்காரி மேளம், வாண வேடிக்கை இவைகளுடன் அலங்கோர யானை மேல் அம்மன் பவனி வருதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைவர் சோமசுந்தரம், துணைத் தலைவர் சிலம்பரசன், செயலாளர் ஜெயசிங், பொருளாளர் முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.